பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 81



வைத்த பொருளை இருந்து உண்ண ஒருவன் எண்ணு வானாயின், அவ்வாறு உண்டல் நீண்ட நாள் நிகழாது. நீண்ட நாள் உண்டல் நிகழாது என்பது மட்டுமன்று; இறுதியில் உள்ளது அற்று, ஊறுபல உற்று, உயிர்க் கேடுறுவது உறுதி உழைக்காது உண்டு வந்தமையால் உள்ளது குறைந்து போம். உழைத்து அறியாதவன் ஆதலாலும், உண்டு பழகியவன் ஆதலாலும், உள்ளது அற்ற விடத்துப், பிறர் உழைப்பைப் பறித்துத் தின்னத் துணிவான். அதனால், அவன் உயிர் வாழ்விற்கே ஊறு நேர்த்துவிடும்.

அத்தகையான் ஒருவன், தன் முன்னோர் போற்றிக் காத்து வந்த பேரரசை அடைவானாயின், வருவாய் வளர்தற்காம் வழிவகைகளைக் காண எண்ணாது, வாழும் மக்களிடம் வரி பல வாங்கி வாழ எண்ணுவான். வரி மேல் வரியென வழங்கி வழங்கி, மேலும் வழங்க மாட்டாது, வறுமையுற்ற மக்களை வாட்டி, அவர்பால் உள்ளன பெற்று உண்ணத் துணிவான். அந்நிலையில், செய்வதறியாது சினங் கொண்ட மக்கள் அவன் ஆட்சியையே எதிர்த்து எழுவர். மக்கள் எழுச்சியை அடக்கமாட்டாது அடங்கி, அம்மக்கள் மன்றத்தில் மண்டியிட்டு மடிவான்.

உழைத்துப் பெற்ற உணவன்றிப் பிற உண்டறியா உரவோன் ஒருவன், பிறரை எதிர்நோக்கி வாழ்வதோ, எதிர் நோக்கியது எய்தாது போக, இழிவு தரும் வழிகளால் வாழ எண்ணுவதோ, அதனால் இடர் பல உறுவதோ இலன், அதற்கு மாறாக ஓயாத உழைப்பால்