பக்கம்:இலக்கியச் சாறு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

வ.சுப. மாணிக்கனார்



கவிஞரின் இயற்கைத் தமிழன்புக்குத் தனிச் சான்றுகள். திருவெம்பாவை பாடுவதற்குச் சிவன் தானே வந்து ஆட்கொண்ட மணிவாசகர் தகுதியுடையவர்; திருப்பாவை பாடுவதற்குச் சூடிக் கொடுத்த ஆண்டாள் தகுதியிடையவர்; அதுபோல் தைப்பாவை என்னும் தமிழ்ப்பாவை பாடுவதற்குத் தமிழே நினைந்து தமிழால் வாழும் கவிஞர் கண்ணதாசனார் தகுதியுடையவர் என்பது என் ஒப்பீட்டின் முடிவு.

நிறைவாக இன்னுமோர் பதினாயிரம் பாடல்

நெய்க என் ஏழை மனமே

என்பது கவிஞரின் ஆசை. பைந்தமிழ்ப் பின்சென்ற

பசுங்கொண்டலுக்கு அடிமையான இக்கண்ணதாசனின் ஆசை நிறைவேறத் தமிழ்த் தெய்வம் நல்ல நெடிய இனிய உடல் நலம் அருளுக.