பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

– 76

வேண்டும். மரம் நடு விழா நடத்திப் பின்னர் மறுநாளே நட்ட மரத்திற்கு நீர் வார்க்காதுவிடும் மரம் நடு விழாக்கள் மறைய வேண்டும். சாலையெங்கும் சோலைகளாய், பாலை வனமெல்லாம் பசுஞ்சோலையாய் மாற, மாற்ற மக்கள் முன்வர வேண்டும். வேட்டைக்கென ஒதுக்கப்பட்ட காடுகள் தவிர வேறு இடங்களில் வேட்டையாடக் கூடாது. வேட்டையாடுதலும்கூட குறிப்பிட்ட அளவோடு நிற்க வேண்டும். எனவே மக்களின் மன ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவை. மக்களும் மக்களாட்சியும் ஒன்று சேர்ந்து விலங்கினங்களையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும். அரசுடன் ஆள்வோர் ஒத்துழைத்து ஆவன செய்தல் வேண்டும்.

வாழ்க விலங்கினம்! வளர்க பறவையினம்!