பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


"உல கீன்ற பச்சை உமையணன்
வட வேங்கடத்தில் உறைபவன்
உயர் சார்ங்க சக்ர கரதலன் மருகோனே"

என்பது அப்பகுதி. இந்தக் குழப்பம் ஏன்? அருணகிரி நாதர் காலத்தில் வேங்கடத்துக் கோயில் திருமால் கோயிலாக இருந்ததால், அந்த உண்மையை அவரால் சொல்லாமல் விட முடியவில்லை. அவர் காலத்தில் அவ்வாறு இருந்ததால் சொன்னார் எனினும், பண்டைக் காலத்தில் முருகன் கோயிலாக இருந்ததால் முருகனுக்கு உரியதாகக் கூறினார் என்னும் உண்மையை மறைக்க முடியாது. எனினும், கருத்தில் குழறுபடி (குழப்பம்) ஏற்படச் செய்திருப்பது அருணகிரிநாதரின் குற்றமேயாகும். -

கந்த புராணச் சான்று

அடுத்து, பதினோராம் நூற்றாண்டினராகிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்துக்கு (கந்தல் புராணத்திற்கு அன்று) வருவாம்: கந்தபுராணம் உற்பத்தி காண்டம் - வழிநடைப் படலத்தில், முருகன் சூரனை அழிப்பதற்காக, வடக்கேயுள்ள தன் கந்தகிரியிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கி வரும் வழியில் உள்ள தெய்வப் பதிகளையெல்லாம் கண்டு சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பகுதிகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்களை ஈண்டு முறையே காண்பாம்:

"என்னையா ளுடையானிடம் சேர்வன்என் றிமையக்

கன்னி பூசனை செய்த கேதாரமும் கண்டான்" (3)

"மையல் மானிடர் உணர்ந்திட மறைமுனி எடுத்த

கையதே யுரைத்திட்டதோர் காசியைக் காண்டான்"