பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கவியூரின் பெருவேந்தன் குறளாசான் ஆண்டுச் சென்று : அருமை மகனே ! வேண்டுகோள் ஒன்று விடுத்தேன்' என்றாள். என்னம்மா ?’ என்றான் குறளோன். தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திட வேண்டும்" என்றாள். "தங்கம் எடுக்கவா ? என்றான் *தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க” என்றாள். 'இன்றென்ன ஆபத் தென்றான்: "குன்றனைய மொழிக்கு ஆபத்'தென்றாள்; சென்றமையக் குடில் இல்லை ஏழைக்கென்றாள்; கடிதோடிச்சி மெல்ல எறியத் தெரியாமல் கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள் : அளவில் கன்றனையோர் வீனில் கதைக்கின்ற கதையும் சொன்னாள், அழுத கண்ணைத் துடைத்தவாறு அமுத மொழி வள்ளுவனும் அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்; தொழுத மகன் உச்சிமோந்து -ஆல விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு; உழுதவயல் நாற்றின்றிக் காயாது இனிமேல் என எண்ணி மனம் மகிழும் உழவன்போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக!' என்றாள். பிறந்திட்டான் நம் அண்ணனாக, அறிவு மன்னனாக(' கவியரங்கில் கலைஞர்", பக். 182-184}