பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 — iv பேராசிரியர் ந. சஞ்சீவி இல்லம் சென்று இரங்கலைத் தெரி விக்கிறார்; உடன் நானும் செல்கிறேன். தமிழர்த் தலைவரைக் கண்டவுடன் தமிழ் நெஞ்சம் கண்ணிர் மல்குகிறது. உணர்வே உருவான பேராசிரியர் ந. சஞ்சீவியை அனைத்து, கலைஞர் ஆறுதல் கூறுகிறார். சென்ற ஆண்டு, பேராசிரியர் ந. சஞ்சீவி மறைவ தற்குச் சில மாதங்களுக்கு முன்பு, டாக்டர் ந. சஞ்சீவி மாலை 4 மணி அளவில் பல்கலைக்கழகத்திலிருந்த என்னோடு தொடர்பு கொண்டு, உடனடியாகத் தலைவர் கலைஞரைப் பார்க்க வேணடும்" என்று கூறினார். நாங்கள் தலைவர் கலைஞரைப் பார்க்க. அவர் இல்லத்திற்குச் செல்கிறோம். தலைவரின் மனைவியார் அன்புடன் எங்களை வரவேற்றுத் தயக்கத்துடன் கலைஞர் இல்லையே என்கிறார். பேராசிரியரோ கலைஞரைக் காண துடிக்கிறார். பேராசிரியரின் ஆர்வத்தை உணர்ந்த அவர்கள் கலைத்துறைப் பணிக்காக ஏ. வி. எம். திரை அரங்கில் கலைஞர் உள்ளார் என்றார்கள். பேராசிரியர் ந. சஞ்சீவியும் நானும் ஏ. வி. எம். அரங்கிற்கு விரைந்து செல்கிறோம். மாலை இரயிலில் தலைவர் தென் மாவட்டப் பயணத்தை மேற்கொள்கிறார் என்ற செய் தியும் சொல்லப்படுகிறது. பாசப்பறவை' திரைப் படத்தின் இறுதிக் காட்சிகளை ஒழுங்குமுறை செய்தற்கான பணியை முடித்து அரங்கிலிருந்து கலைஞர் வருகிறார். பேராசிரியர் ந. சஞ்சீவியையும் என்னையும் காரில் ஏற்றி இல்லம் சென்று உரையாடுகிறார். பேராசிரியர் சொல்ல. வேண்டிய செய்தியை நேரில் சொல்லி விட்டோம் என்று களிப்படைகிறார். கலைஞரோ, பேராசிரியர் ந. சஞ்சீ வியின் உடல் சோர்வைக் கண்டு கவலைப்பட்டு, எந்தச் செய்தி கிடைத்தாலும் அதிர்ச்சி அடைய வேண்டாம் என்று பேராசிரியரிடம் கூறுகிறார். நாளெல்லாம், தமிழர் நலனையே நாடும் தாயுள்ளம் கொண்ட தமிழினத்தின் பாசப்பறவை, சஞ்சீவி எனும் தமிழ் நேசப்பறவையின் மீது