பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சிலப்பதிகாரத்தின் இ லக் கி ய எழிலோ உருவோ சிதையா வண்ணம் . சிலம்பில் காணும் செந்தமிழ் இனிமை - இளங்கோ தந்த இன்றமிழ் இனிமை. மாற்று குறையாது இந்நூலில் இருப்பது மெச்சத் தகுந்தது : எடுத்துக்காட்டுகளுடன் இவ்வுண்மையை மெய்ப்பிக்கும் பேரறிஞர் தம் திறனாய்வின் முடிவை முழங்குகிறார். நூல் முழுவதும் கருணாநிதி ஒரு காவியப் படைப்பிற்குத் தேவையான செழுஞ் சொல்லோட் டத்தை-சீரிய அழகு அமைப்பை உருவாக்கித் தருகிறார். இந் நாடக நூலை வெளிக் கொணர்வதன் மூலம் தம்பி கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு நற்பணி ஆற்றியுள்ளார். இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்ததன் மூலம் சிலப்பதிகாரம் வழியாய் இளங்கோவடிகள் தந்த உணர்வும்-உயர்ந்த செய்தியும் தமிழகத்தை விடப் பெரிதான உலகிற்குப் பரவ வழி ஏற்பட்டிருக்கிறது ! வாழ்க தமிழ் ! வாழ்க தமிழகம் ! இவ்வாறு நிறைவுறும் பேரறிஞர் மதிப்பீட்டால் நம் பெருங்கலைஞர் எழுத்தின் பண்பும் பயனும் இனிது விளங்கும்.