பக்கம்:இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-8-

2: 1: மொழி அக வளர்ச்சியின் புற வெளிப்பாடாகும்.

2: 2: இவ்வுலகிற்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பைத் துலக்கிக் காட்ட மொழியைப்போல் வேறொரு வெளிப்பாடு மாந்தரிடத்தில் இல்லை.

2:3 :மொழி முக்காலத்தையும் இணைத்து நிற்கும் ஒரு வெளிப்பாடாகும்.

2:4: மொழியில் வெறும் எழுத்துகளோ, சொற்களோ, தொடர்களோ கருத்துகளோ மட்டும் இல்லை. மாந்தனின் அறிவு வளர்ச்சி், உள்ள வளர்ச்சி, துய்ப்பு வளர்ச்சி, வறலாறு, காலம், இடம் முதலிய அனைத்தும் அடங்கியுள்ளன. இவ்வனைத்து நிலைகளிலும் மொழி் தன் கால்களை ஊன்றியுள்ளது.

2:5: ஒலியும் ஒளியுமாய் விரிந்து இப்புடவி யெங்கும் அளாவியுள்ள மெய்க்கூறுபாடுகளில் ஒலிக்கூறுபாட்டை, மொழி வெளிப்படுத்துவதுடன் ஒளிக்கூறுபாட்டையும் தனக்குள் அடக்கிக் கொண்டுள்ளது. எனவே மொழி அகமும் புறமும் அகப்புறமும், புறப்பறமும் ஆகும். [1]


2:6: மொழி இல்லையானால் உலகம் தன் இயக்கத்தின் ஒரு பகுதியை இழந்துவிடும்.

2:7: மொழி் மாந்தனுக்கு எவ்வளவில் இன்றியமையாததோ, அவ்வளவில் மாந்தன் மொழிக்கு இன்றியமையாதவன்.

2:8: மொழியின் ஒவ்வொரு பகுதியும் மாந்த இனத்தின் ஒவ்வொரு பகுதியினரால் உருவாக்கப் பெற்றது. அவர்கள்


  1. மொழியால் நினைப்பது அகம்; மொழியால் பேசுவது புறம்; மொழியால் எழுதுவது அகப்புறம்; மொழியால் கேட்பது புறப்புறம்;