பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான், அவ்விளந்திரையன் வீணே போரிடாது, அவனும் அவன் வீரரும் மடியாது இருக்கும் பொருட்டுத் தூதுவரை அனுப்பி அமைதியினை நிலை நாட்டக் கருதினன், தூதுவராக யாரை அனுப்புவது என்ற எண்ணமும் அவனுக்கு உடன் தோன்றியது. இவ்வெண்ணத்தின் முடிவு ஒளவை மூதாட்டியாரையே தூதுவராக அனுப்புவது என்ப தாக அமைந்தது. வேறு எவரை அனுப்பினும் போருக்கு எழவே முடிவு ஏற்படும். ஆனால் ஒளவை யாரை அனுப்பினால், அப்படி ஒன்றும் ஏற்படாமல் எல்லாம் இனிது முடியும் என்ற நோக்கங் கொண்டே ஒளவையாரையே தூதுவராக அனுப்பத் தீர்மானித்தான். அத்தீர்மானத்திற்கு ஒளவையாரும் இசைந்து, தொண்டைமான் இளந்திரையனிடம் தூதராகப் போயினர். தொண்டைமான் இளந் திரையன் ஒளவை மூதாட்டியாரைக் கண்டதும், இன்முகம் காட்டி இன்னுரை கூறி நல்வரவேறி றுச் சிறந்த ஆசனத்தில் அமரச் செய்து வணங்கித் தன் இருக்கையில் அமர்ந்தனன்.

ஒளவையாரும் தொண்டைமானும் சிறிது நேரம் பல விடயங்களைப்பற்றி உரையாடினர். ஒளவையாரும் தாம் இன்ன தன் பொருட்டு வந்த தாக ஒன்றும் தொண்டைமானுக்கு உணர்த்திலர். அவனும் அவ்வம்மையாரை, 'எங்கு ? எதன் பொருட்டு வந்தீர் ?' என்று வினவவும் இல்லை. ஒளவையார் புலவர் சிகாமணியார் ஆதலால், அவர் பல்வேறு இடங்கட்குச் செல்லும் பான்மையர். அம் முறைப்படி தன்னிடம் வந்தவர் என்ற எண்ணத்