பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் இளந்திரையன் வந்த காரணத்தை வினவாது இருந்தனன். என்றாலும், தன் படைவன்மை இவ் வேளவு என்பதை ஒளவை மூதாட்டியார் அறியின் ஒரு வேளை அதிகனை அம்மையார் கண்டு உரைக் கவும் கூடும் என்று உளம் கொண்டு தன் படைக்கலக் கொட்டிலைக் (படைக்கலங்கள் வைக். 'கப்பட்ட இடம்) காட்ட அழைத்துச் சென்றனன்.

ஒளவை மூதாட்டியார், படைக்கலங்கள் பல வும் புதியனவாகச் செய்யப்பட்டுக் கைப்பிடிகள் நல்ல உறுதியுடையனவாக அமைக்கப்பட்டு, முனை கள் யாவும் கூர்மையுடையனவாய் இருக்கப்பெற்று, நெய்யும் பூசப்பட்டு, மாலைகளும் சூட்டப்பட்டு இருக்கின்ற நிலையினை நன்கு கண்டனர். ஒளவைப் பிராட்டியார் இதுதான் தாம் வந்த கருத்தை அறிவிப்பதற்கும், தொண்டைமான் இளந்திரையன் படைவன்மையின் செருக்கை அடக்குதற்கும் ஏற்ற சந்தர்ப்பம் என்று உளம் கொண்டு, "தொண்டை மான் இளந்திரைய! நின் படைக்கலம் கண்டு பெரு மகிழ்வு கொள்கின்றேன். உன் படைக் கலங்கள் போர்முனை காணாதனவாய், கூர் மழுங்காமல், கைப் பிடிகள் தளராமல், மாலையணிந்து நெய்தடவப் பட்டு அலங்காரமாகப் படைக்கலச் சாலையில் கட்டு டன் இருக்கின்றன. ஆனால், அதிகமான் நெடுமான் அஞ்சியின் படைக்கலங்களோ எனில், போரில் மிகுதியும் பயன் பட்டுப் பகைவர் உடலில் புகுந்து, இரத்தக் கறை தோய்ந்து, முனைகளில் தசைகள் பற்றப்பட்டுக் கைப்பிடிகள் தளர்ந்து கூர் மழுங்கி மீண்டும் போருக்குப் பயன்படும் நிலையினைப் பெறக்