பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலக்கியத் தூதர்கள்

போன்ற இலக்கியத் தூதர்கள் இன்னும் பலர் உளர். இவர்களைப் பற்றியும் இவர்கள் மேற்கொண்ட தூதினைப் பற்றியும் விளக்குவதே இந்நூல்.

இந்நூலைச் சுவைபட, நயம்மிக இயற்றித் தந்தவர் திருக்குறள்மணி அ. க. நவநீத கிருட்டிணன் என்பவர் ஆவர். சொற்சுவை பொருட்சுவைபட எழுதுவதில் தனித்திறமை படைத்தவர் இவர். இவருடைய நடை இளைஞரை ஈர்க்கும் இனியநடை. இந்தப் பயனுடை நூலை எழுதித் தந்த இவருக்குக் கழகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்நூலைப் பலரும் படித்துப் பயன்பெறுவதோடு, குறிப்பாகப் பள்ளியில் பயிலுஞ் சிறார் அனைவரும் கற்றுத் தெளிந்து களிப்புறுவர் என நம்புகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.