பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்ைக்மெண்ட் வந்துருத்து தஞ்சாவூர் மாவட்டம் பதினெட்டு கிராம வாத்திமர்குடும்பம். செல்வச் செழிப்பு, ஈசுவர ஆராதனை, பெரியவாளிடம் பக்தி. ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமர்சையாக விவாஹம் நடந்தேறியது. மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை. எந்த கிரகம் இடம் பெயர்ந்ததோ? சாதாரணமாகத் தோன்றிய கசப்பு, விவாகரத்து வரை வந்து விட்டது. -- விசாரணைகள், ஆலோசனைகள், மறு ஆய்வுகள்... ஊஹா9ம். - நாளைக்குத் தீர்ப்பு. - பெண்ணும் பெற்றோரும், பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள். 'காமாr தரிசனம் பண்ணிட்டு வாங்கோ." அப்புறம் பையனும் பெற்றோரும் வந்தார்கள். பெரியவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது. “நாளைக்கு ஜட்ஜ்மெண்ட்...' - “காமாr தரிசனம் பண்ணிட்டு வாங்கோ...' கோயிலில் ஏராளமான கூட்டம். அத்துடன், பக்தி பூர்வமாகத் தரிசனம் செய்யும் நிலையில் யாருமில்லை. பெரியவா சொல்லிட்டா; அதனால் வந்தேன்." ஸ்தானிகர் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத் தட்டைக் கொண்டு வந்தார்: "சேர்ந்து வாங்கிக்கோங்கோ.” - - சேர்ந்து "நான். தனியாத்தான் வந்தேன்." சட்டென்று தலை நிமிர்ந்தபோது, அவர். அவள்... 'சேர்ந்து வாங்கிக்கோங்கோ...' காமாகூவியின் ஆணையா? - - கோயிலிலிருந்து வெளியே வந்தபோது, இரண்டு குடும்பத்துப் பெரியவர்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள். • * * விவாகரத்து, ரத்தாகி விட்டது. காமாrயல்லவா, ஜட்ஜ்மெண்ட் கொடுத்திருக்கிறாள்! இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 33