பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


'கையாலே பூவெடுத்தாக் காம்பழுகிப் போகுமென்று விரவாலே பூவெடுத்தா 4. தூய்மை வோழுகிப் போகுமென்று துணை பொன்னு:சி கொண்டு o பூத்த மலரெடுத்து வெள்ளி ஊசி கொண்டு வெடித்த மலரெடுத்துTT4 எனக் கை பட்டால் காம்பழுகும், வேரழுகும் என்றால் என் தூய்ம்ை எத்தகையது என்பதை உணரலாம். பொன்னுசியும் வெள்ளி ஊசியும் எனது தூய மேன்மையைக் காட்டுகின்றன. அரும்பை யாவரும் விரும்புவர். மணம் கருதி மட்டுமன்று. காற்றுபட்டுத் தூய்மை கலையாத நிலை; வண்டு எச்சிலாக்காத பருவம். முற்காலத் தமிழர் அரும்புகளைக்கொண்டே மாலை யாக்கி அணிவர். எனது தூய்மை கருதியே இறைவனுக்குரிய பொருள்களில் நான் முதன்மை பெற்றேன். ஒரு பட்டத்தரசியின் மூக்கைச் செருத்துணையார் என்னும் தொண்டரும் அவளது கையைக் கணவன் கழற்சிங்க மன்னனும் அரிந்ததும் வெட்டியதும் ஏன்? வழிபாட்டிற்குரிய பூவை எடுத்தும் மோந்தும் அதன் தூய்மை போக்கிய கு ற் றத் தி ற் காக அன்றோ η ΤΤ5 ஒருவர் வைகறைப் போதில் நீராடிச் செல்கின்றார். வாயைத் துணியாலே மூடிக் கட்டிக்கொண்டுள்ளார். அவர் அறுவை மருத்துவத்திற்குச் செல்லும் மருத்துவர் அல்லர். எறிபத்தர் என்னும் அடியார். வாய்க்காற்று பட்டால் வழிபாட்டு மலரின் தூய்மை கெடுமென்று, 'வைகறை உணர்ந்து போத்து புனல் மூழ்கி வாயும் கட்டி’ப் போனாராம், மலராகிக் 114 நாட்டுப்பாடல் 115 ... ... --> ... ஆகுர் மணிக்கு வைத்த போதினைத்தான் மோக்க, தேவிதன் முக்கை அரியப் பொற்கை கதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான், நாதமொய்த் தார் வண்டு கிண்டுபைங் கோதைக் க்ழற்சிங்கனே! -திருத்தொண்டர் திருவந்தாதி : 64 116 பெரி. பு, 4. எறிபத்தர் : 9 -