பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


கினர். அவருள்ளும் இலக்கியம் பெற்ற இனத்தார் நூற்றளவினர். நூற்றளவிலும் மாந்தருடன் ஒருங்கு இணைந்தவை பல. பலவற்றுள்ளும் மாந்தரது வாழ்க்கையில் இடம்பெற்றவை சில. இடம்பெற்றவற்றுள்ளும் இன்றியமையாதது ஆகித் தமிழர்தம் வாழ்வில் மரபுகளை வகுத்த பணி முல்லைக்கு உண்டு. எனவே, முல்லை மலர், வாழ்வியல் மலர். என்னைப் பேசவைக்கின்றவர் இந்த வாழ்வியல் மலர் விளக்கத்துடன் உங்களோடு தொடர்பு கொள்வார். தொடர்ந்து, மக்கள் மலர் மலரும். தெய்வ மலர் திகழும். திணை மலர்கள் தினவேற்றும். மும்முடி மலர்கள் முழங்கும். அறிமுக மலர்கள் அலரும். அரிய மலர்கள் புரியும். எளிய மலர்கள் ஏற்றம் பெறும். முருங்கையில் முடியும். "வாழ்க முல்லைப் பூ முதல் முருங்கப் பூ வரை' 6TöT வாழ்த்தி வாழ்வீராக! என்றும் உங்களுக்காக மலரும், 移感 ?? 넓,"