இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. முல்லை முதல் முருங்கை வரை
வாழ்வியல் மலர் - முல்லைப் الا
மலர் பாய்ந்தால் மணவறை அழைப்பு
ஒரு தமிழ்க் குடும்பம் ஒவ்வொருவரும் உணர்ச்சிக் கொப்பளிப்பில் உள்ளனர். வீடே கலவரப்பட்டுள்ளது.நிகழ்ந்தது என்ன?
முதிய தாய் ஒருத்தி கைகளை நெரித்தவாறே ஓடி வருகின்றாள். இல்லத்துத் தலைவியிடம் ஏதோ கிசு கிக் க்கின்றாள். கேட்ட அந்த நற்றாய், தீயைத் தொட்ட வள் போலக் கைகளை உதறுகின்றாள். தந்தையின் காதில் ஒதுகின்றாள். தந்தையின் கண்கள் நெருப்புக் கோளமாகின்றன. மூத்த பையன் திணவெடுத்த காளை போன்று பாய்கின்றான். அடுத்தவன் 'அப்படியோ' என்று வீட்டில் யாரையோ தேடி ஒடுகின்றான். ' வெடிச் சொற்களும், தடிப் பேச்சுகளும் ப்ோகப் போக முனகலாகின்றன. சூடு தணிகின்றது. அப்ப்டி