பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


மெளவல் நிறத்தாலும் வடிவத்தாலும் இதழ்களாலும் மனத் தாலும் முல்லையைப் போன்றதேயாகும். இரண்டும் மனைகளிலே இடம்பெற்ற கொடி மலர்களேயாகும். ஆனாலும், முல்லை "மனை வளர் முல்லை' என்று இலக்கியங்களால் பேசப்படும் அளவிற்கு மெளவல் குறிக்கப்பட வில்லை. முல்லை மனை முற்றத் தில் நட்டுப் பேணி வளர்க்கப்படும். மெளவல் வளர்க்கப்படுவதை விடத் தானே வளர்தல் மிகுதி. முல்லை பந்தலில் படரும். மெளவல் இவ்வாறு படர்வதை விட மரங்களில் படர்ந்து வளர்வது. இதனை, 'மனைமரத்து o . எல்லுறு மெளவலும் நாறும்' -என்னும் குறுந்தொகை (19 : 3, 4) அடியாலும், 'மனை இன நொச்சி மெளவல் வான்முகை' (அகம்: 21: 1), -என மனை முன்றில் மரமாகிய நொச்சியுடன் இணைத்துப் பேசப்படுவதாலும், 'மயிலடி இவைய மாக்குரல் நொச்சி மனைநடு மெளவவொடு ஊழ்முகை அவிழ’ நற்றிணை (115 : 6) -என்னும் அடிக்கு 'மனையின் (நடு) கூரைமேல்.’ எனப் பொருள்கொள்வதாலும் அறியவேண்டும். இச்சிறு வேறுபாடுகளன்றி பிறவகைகளில் ஒற்றுமையுடன் மிக மிக ஒன்றியவை. அதனால்தான் புலமைப் பெருமக்கள் மகளிர்தம் முறுவலுக்கும், பல்லிற்கும் உவமையாக்கப்படும் முல்லையைப் போன்றே மெளவலையும் உவமையாக்கிப் பாடினர். பின்வரும் அடிகள் நோக்கத்தக்கன : கமனை மெளவல் முகையன்ன மாவீழ்வான் திரைவெண்பல்” (கலி : 14 : 3) மோதரார் முறுவல்போல் மணமெளவல் முகையழ்ப்ப" . - (கலி : 27 : 4) -எனவே முல்லையொடு ஒன்றிய உற்றாள் மெளவல்’ என்பது மிகப் பொருத்தமானதாகும். -