பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

149


                  குறுமகள்"- நற் : 142 “முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
                  குறுமகள்" - அகம் : 274
   இவ்வாறு பல்வேறு இலக்கியங்கள் ஒரே வகை தொடரால் முல்லையொடு கற்பை இணைத்துப் பாடின. இவைகொண்டு முல்லை கற்பின் சின்னம் என்பது எந்த அளவில் அடிப்பட்ட வழக்காயிருந்தது என்பதை உணரலாம். இவற்றிற்கு எல்லாம் உரை எழுதியவர்கள்,
   "முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு"-என்றும், 
   "கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல்இயல்பு"1
-என்றும் விளக்கினர்.
    இம்மரபு ஆழ்ந்த பிடிப்பாகி 'முல்லை’ என்ற சொல்லுக்கே 'கற்பு’ எனும் பொருள் ஏறியது.
   'மெளவலும் தளவமும் கற்பும் முல்லை'2 -எனச் சேந்தன் திவாகரம் முல்லைக்கு ஒரு சொல் 'கற்பு’ என்று அமைத்தது.
   கட்டியங்காரன் அநங்கமாலை என்பவளது கற்பைப் பறித்தான் என்பதைத் திருத்தக்க தேவர்,
 "தரனுடை முல்லை எல்லாம் தாது உகப் பறித்திட்டானே'8 -என்று கற்பை முல்லை என்னும் சொல்லாலேயே குறித்தார். இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியரும்,
  "சீவகனையே கூடுவன் என்றலின், முல்லை-கற்பு" என்று குறித்தார். .
  முன்னர் கொற்றவை முல்லைக் கொடி வளர்த்த செய்தி கண்டோம். அவ்விடத்திலும் அதன் உரையாசிரியர்,
  "தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை என
                             உணர்க"

-என விளக்கினார்.

    இவ்வாறு முல்லை கற்பின் எல்லை அளவாயிற்று.

1 சிறுபான் : 30 தச்சர் உரை 2 சீவ, சீ:686 2 சேந், தி : மரப்பெயர் 197, 4 தக்க : 75 உரை