240
அன்பாம் காதல் உணர்வு மென்மைத் தன்மையது. 'மலரினும் மெல்லிது காமம்’ அன்றோ? மென்மை வாய்ந்த அன்புத் திணைகளுக்கு மென்மை வாய்ந்த மலர்களையேகுறியீடாக் கிய பாங்கு ஒர் அருமைப் பாங்காகும். ஏனைய இரண்டும் மலர்ப் பெயரைப் பெறவில்லை. பெற முடியாதவை; பெறக் கூடாதவை,
இவ்வாறு பெற்ற பெயர்க் குறியீடும் காரணத்தால் அமைந்ததே.
'முல்லை, குறிஞ்சி என்பன இடுகுறியோ: காரணக்குறியோ?” -என்றொரு வினாவை இளம்பூரணர் என்பார் எழுப்பிக் கொண்டார். இவர் தொல்காப்பியத்திற்கு முதன் முதல் உரை யெழுதியவர். இவரே விடை கூறினார்:
'ஏகதேச காரணம்பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி
என்று கொள்ளப்படும்'1 -என்றார்.
என்ன காரணமோ? அவரே இதற்கும் வினா எழுப்பி விடை தந்தார்:
"'என்னை காரணம்? - எனின், காடுறை உலகிற்கு முல்லைப் பூ சிறந்தது ஆகலானும், மைவரை உலகிற்குக் குறிஞ்சிப் பூ சிறந்தது ஆகலர்னும், தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும், பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையானும் இந்நிலங் களை இவ்வாறு குறியிட்டார்' - எனப் பூக்களின் சிறப்பால் நிலங்கள் பெயர் பெற்ற காரணத்தை விளக்கினார், பாலை என்பது தனி நிலம் அன்று. எனினும் அதிலும் பாலைப் பூ உண்டு. அப்
பூ சூடிக்கொள்ளும் பூ அன்று. ஆகலான், பாலை மரத்தைக் குறியீடாகக் காட்டினார். -
அகத்திணைகளை வைத்துத்தாம் புற த் தி ைண கள் அறிமுகம் செய்யப்படும். வெட்சிதானே குறிஞ்சியது புறனே' (தொல்: பொருள்: 8.9) என்பது போன்று இன்ன அகத்திற்கு இன்ன புறம் என அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடர்பாலும் புறந்திணைகளும் பூக்களால் காரணக் குறி பெற்றவை. இதனை யும் இளம்பூரணர், r
1 தொல், பொருள் உரை