பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்களின் பெயரால் இசையும் இசைக் கருவிகளும்

முல்லை : முல்லை யாழ், முல்லைப் பண் உள்ளன. குறிஞ்சி : குறிஞ்சி யாழ், குறிஞ்சிப் பண்; இரவில் காவல் புரிவோர் தாம் காவலுக்கு இருப்பதை அறிவிக்கவும், துளக்கத்திற்கு ஆட்படாதிருக் கவும் குறிஞ்சிப் பண் பாடுவர்.

மருதம் : மருதயாழ், மருதப் பண். பாலை : பாலை யாழ், பாலைப் பண் ஆம்பல் : ஆம்பல் இசையும் அல்லிக் கூத்தும் உண்டு. காஞ்சி காஞ்சிப் பெயர் கொண்ட இசை செவ்வழிப் பண் வகையினது. போர்ப் புண் நலம் பெறவும், காற்றாவி அணுகாதிருக்கவும் இதைப் பாடுவர்.

பூப்பெயர் ஊர்கள் - நூல்கள்

பூக்களின் சிறப்பான தன்மையால் தமிழ் நிலத்தில் பல ஊர்கள் பூப்பெயர் பெற்றிருப்பதையும், பூகிகளின் பெயரால் இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதையும் மற்றும் பூக்களின் பெயரால் புலவர்கள் பெயர் கொண்டிருப்பதையும் ஆசிரியர் நூல் முழுவதும் ஆங்காங்கே சுட்டிச் சென்றுள்ளவை இங்கே தொகுக்கப் பட்டுள்ளன. முல்லை - திருமுல்லை வாயில். முல்லையூர், - முல்லைக்காடு, முல்லைப்பாடி. குறிஞ்சி - குறிஞ்சிப் பாடி . மருதம் - மருதுTர், மருதவேலி, மருதம்பாக்கம். நொச்சி - நொச்சி நியமம் ஆர் (ஆத்தி) - திருஆரூர், ஆர்க்காடு. Jö》究T - பனையூர், பனங்காடு, திருப்பனந்தாள் தாழை - தாழையூற்று, தாழையூர், தாழைக்காடு, தாழந்திருவாயில். ö阿山广 so காசாங்காடு, காசாங்குளம், பிடஆர். பிடவம்