பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 விரிந்த அகவிதழால் - அலர் பூந் தும்பை" தூய்மையால் - துப்புடைத் தும்பை" களப்போர்க்கு உரிமையால் - போர்த் தும்பை” போர்க்கடுமையால் - வெப்புடைத் தும்பை” சூடும்போது இசைக்கருவிகள் துவைத்துமுழங்கப்படுதலால்- 'துவைத்த தும்பை' தோல்விக்கு ஏது.ஆகாமை'எனக் குறிக்கப்பட்டதால் - தோலாத் தும்பை' குறிக்கோளில் வெற்றி விளைப்பதால் - வாகைத் தும்பை பொன்னால் செய்யப்படுவதால் - பொலந் தும்பை" பிறவற்றாலும் செய்யப்படுவதால் - வாடாத் தும்பை

த்துணை அடைமொழிகளால் சிறப்படையும் தும்பைப் பூ எவ் அடைமொழி இல்லாமலும் ஒரு சிறப்பைப் பெறுகின்றது. அடைமொழி மட்டு மன்று, தும்பை எனும் பெயரே இல்லாமல் ஒரு தனியிடம் பெறுகின்றது. பொதுப் பெயராகிய 'பூ' என்னும் பெயரே தும்பையைக் குறிக்கும் அளவில், - -

'ஒன்னார் தேயப் பூ மலைந்து'! 延、 - எனத் தும்பை குறிக் கப்பட்டது. போரில் பூ என்றாலே தும்பை என்னும் இடம் பெற்றது தனிச் சிறப்பே. தும்பையின் பெயரால் 'தும்பை மாலை' என்றொரு சிற்றிலக்கியம் உண்டு. இத்துணையும் பெற்ற தும்பை குணத்தில் எவ்விடத்தைப் பெற்றுள்ளது? - 'தள்ளருத் தும்பை, சாதி சாத்திக மலர்களாமே'2 -என்றபடி தும்பை சாத்துவிகக் குணங்கொண்ட மலர், சாத்துவிகம். என்னும் அமைதிக்குணம் முக்குணங்களில் மேம்பட்ட குணம் அன்பு அருள், அறிவு, பொறை, அடக்கம், வாய்மை என்னும் மென்மைக் குணங்களின் குறியீட்டுச் சொல் சாத்துவிகம், இக்குணங்களுக்கும் உரியதாகக் குறிக்கப்பட்ட, , , 1 பதி, ப : 40 : 9, 2 புட், வி. §§ { 4,