394
இரண்டும் மேல்நோக்கிய வளர்ச்சியுடையவை. காந்தள் சற்றுப் பெரிதாக வளப்பமானது. காந்தளின் காம்பு நீள் துடுப்பு எனப்படும். தோன்றிக் காம்பு சிறியதாகத் துடுப்பு எனப்படாது.
கோடல்: கோடல் வெண்மை; காந்தள் செம்மை.
இரண்டின் காம்பும் துடுப்பு எனப்படும்.
இரண்டிற்கும் மருப்பும் பாம்பும் உடைவளையும்
உவமையாகும். மூன்றும் ஒரே அமைப்பில் தத்தம் நிற வளர்ச்சியில் நிறம் மாறு
பவை.
签
முன்றின் பொதுமை: மூலத்தால் குறிஞ்சி
தொல்காப்பியத்தில் 'தெய்வ உணாவே' (பொருள் :18, என்னும் நூற்பா அகத்திணைகளின் கருப்பொருள்களைக் குறிப்பது. இதன் உரையாசிரியர் யாவரும் குறிஞ்சித் தினைப் பூவாக வேங்கை, குறிஞ்சி, காந்தள் எனக் காந்தளை யும் குறித்தனர்.
பேராசிரியர் தம் திருச்சிற்றம்பலக் கோவை உரையிலும்
- காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூ" பைங்காந்தள் என்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்த
,:1 எனக் காந்தளுக்குக் குறிஞ்சி நிலத்தைச் சொன்னார். பின்னர் தோன்றிய அகப்பொருள் விளக்கமும், ... ...வேங்கை குறிஞ்சி காந்தள் ......குறிஞ்சிக் கருப்பொருளே" (20 : 5, 12) -என்றது. பிற இலக்கண நூல்களும் இவ்வாறே குறித்தன. l திருக்கோ : 1 உரை