பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435

 3. பொன் மலர்

கொன்றை

பொன்மலர் நாற்றமுடைத்து பொன்னாகப் பொலியும் பூக்களில் கொன்றை திறைவான இடம் பெற்ற பூவாகும். இலக்கியங்களில் பொன்பொன்னாகப் பூக்கின்றது: 'பொன்கொன்றை' (பொருந் ! 201) 'பொன் வீக் கொன்றை ' (நற் : 246 :8) 'கொன்றைப் பொன் நேர் புது மலர்' (அகம் : க.வாழ்த்து:1) • பொன் என மலர்ந்த கொன்றை ' (ஐங் : 420 : 14) 'பொன் எனக் கொன்றை மலர' (நற் : 242 : 3) 'பொன் தேர் கொன்றை மாலை' (ஞான : தே மீஞ்சூர்:3:1) -என்றெல்லாம் கொன்றையைப் பொன்னாக, பொன்போலக் காண்கின்றோம். பொன்னாலான தாளமிட்டுப்பாடும் திருஞானசம்பந்தர், “கொன்றை கள் பொன் சொரிய'க்? - கண்டார். சங்க இலக்கியங்களில் தோய்ந்த பாவேந்தர் பாரதிதாசனார், “நின்றசெங் காந்தட்டி நேரில் கை ஏந்தநெடும் கொன்றைமலர் பொன்னைக் கொட்டுகின்றாள்"' 2 - என்று காந்தளைக் கை ஏந்த வைத்துக் கொன்றையை வள்ளலாக்கிப் பொன்னையே கொட்டவைத்துள்ளார். பொன் வாணிகர் ஒருவரது மகன் ஒரு புலவர், பெயர் நப்பூதனார். இளமை முதல் பொன்னின் ஒளியைக் கண்டவரன்றோ ? அப்பழக்கத்தில் போலும், 'கொன்றை நன்பொன் கால" - என்று கொன்றை பொன்னின் ஒளியைக் காலுவதாக -- வீசுவதாகக் கண்டார். அதிலும், பொன்னின் மாற்றுப் பார்த்தவர்போல் " நன்பொன்' என்றார், இவ்வொளி மாங்குடி மருதனார் பாட்டில், - 8 முல், பா! 94, 1 ஞான, தே : புகலி ; 6. 8. தயிற்பாட்டு எக்கச்சக் குயில் :1, 2,