பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவின் அன்ன நேர் அரும்பு பேனிக் கார்நயத் தெய்து முல்லை' - முல்லையெனில் அது வெண்மையைக் குறிப்பதை நிலவின் அன்ன நேர் அரும்பு’ எனப் பாடிக் காட்டினார் ஒதலாந்தையர். தளவு செம்முல்லை. முல்லைக் தெர்டிபோன்றே இது பற்றிப் படரும் கொடி அதனைப் போன்றே புதலாகச் செறிந்து வளர்ந்து பின்னர் வளைந்து கொடியாகப் படரும் *

புதன் மிசை முல்லை தளவமொடு போதவிழ'2 - என இரண்டும் புதலாக வளருமாயினும், தளவம் முல்லையைவிடச் சற்று அடர்ந்த புதராக வளரும். அதனால் பலரும் இதனைப் புதராக அடைமொழியிட்டுப் பாடினர், "٬۰۰۰ ، ،. . . . ۰۰۰ புதன்மிசை பூமலி தளவமொடு” (குறுந் , 382) "புதல் இவர் தளவம் (நற் : 242 :) புதல் தளவின் பூச்சூடி’ (புறம் : 395 : :) -

. இதன் நிலமும் முல்லை. "... ... ... ... முல்லை போதவிழ் தளவமொடு விடவங் கவி ைப் பூவணி கொண்டற்றாற் புறவே” எனவும் புறவெனும் ox : நிலத்ததாகக் காண்கின்றோம். முல்லையைப் போன்றே 'பிடவம் மலரத் தளவம் நனையக் கார்கவின் கொண்டன்று கானம்" - என்றபடி கார்கால மலர். இதன் அரும்பும் மலரும் செம்மை நிறத்தன. இவ்வரும்பின் வடிவம் கவுதாரி' என்னும் இதலின் கால் நகம் போன்று கூர்மை யானது என்பதை ஒரோடோகத்துக் கந்தரத்தனார் என்னும் புலவர், "புதன் மிசைத் தளவின் இதன்முட் செந்தனை'5 - என்றார். இதனால் இதன் அரும்பு கூரிய முனைகொண்டது என்பதையும், செம்மை நிறங்கொண்டது என்பதையும் காட்டினார். இக்கூர்மை 1 ஜங் : 454, 4 ஜூன் : 499, 2 ஐத் எ :24, 5 அகம் : 28 : 8, 8 si : 412. -