பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



30. சேவற் கொண்டை மலர்

கவிர்.

முருக்கு இனத்தைச் சேர்ந்தது கவிர். மரத்தாலும், மலரின் நிறத்தாலும் இரண்டும் ஒத்தவை. இரண்டிற்கும் மரமெங்கும் முள் உண்டு. இலக்கியங்களில் கவரின் முள் குறிக்கப்படவில்லை. ஆயினும், இதன் பூவைப்பற்றி இலக்கியங்கள் காட்டும் கருத் துகள் நாம் தற்காலத்தில் காணும் கலியான முருங்கை என்ப துடன் முழுமையாக ஒத்துள்ளன. கலியான முருங்கையில் முருக்கு போன்ற முள் உள்ளதை அறிவோம். நிகண்டுகள் "கவிரே கஞ்சுகம் முள்முருக்காகும்" -ன்னமுள் முருக்காகச் சொல்கின்றன. இதுகொண்டு போலும் உரை திரியர்கள் கவிர்' என்பதற்கு 'முள்முருக்கு என்றே பொருள் எழுதினர். இரண்டிற்கும் உள்ள பிற ஒற்றுமைகளால் நேர்ந்த தாகவும் கொள்ளலாம். இலக்கியங்களை நுணுகி நோக்கின் இரண்டும் @ುಮೆ 3ುಖTST S 5TST அறியலாம். இரண்டின் பூவைப்பற்றிய விளக்கங்களே வேறுபாடறியப் போதுமானவை, இரண்டும் நிறத்தால் ஒத்த சிவப்பானவை. ஆனால், வடிவமைப்பில் வெவ்வேறானவை. முருக்கு மலர் சண்டைச் கடுவலின் பிடரி சிலிர்த்ததைப் போன்றது என்று கண்டோம் ஆனால், கவிர்ப் பூவோ, - கவிர்ப் பூ அன்ன நெற்றிச் சேவல்' (அகம் : 267 : 1.1,12) கவிர்ப் பூ நெற்றிச் சேவல் (புறம் : 326 6) கவிர், அலர் பூத்த சென்னி வாரணம்’ (கல் : பாயிரம்) - - எனச் சேவலின் நெற்றியென்னும் கொண்டையாகக் காட்டப்பட்டுள்ளது. முருக்கு , கேவலின் பிடரி, கவிச் சேவலின் நெற்றிக் கொண்டை gதுவின் நெற்றிக்கொண்டை என்பது தலைக்குமேல் அமைந்தது. முன்பகுதியை அடுத்தடுத்துச் சிறிய சிறிய செம்மையான தசை அமைப்பைக் கொண்டது. இதுபோன்று கவிர்ப் பூவின் அமைப்பும் உளது. பெரிய அகவிதழை அடுத்தடுத்த அதே அமைப்பில் அகவிதழ்கள் சிறுத்துச் சிறுத்து அமைந்திருக்கும். முற்றிலும் சேவற் கொண்டைக்குப் பொருந்துவது. முருக்கு இக்கொண்டிை 1 ல், 2696.