பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616


"...... ... ... முன்றில் (உ) முந்துாழ் ஆய்மலர் உதிர - என்றுள்ளது. இங்கும் :உந்துTழ்’ என்றிருப்பதே உதிர' என்று வரும் சீருக்கு நிறை வான மோனையாகும். குறுந்தொகையில், தோன்று முந்துாழ்' - என்றுள்ளதைத் தோன்றும் + உந்தூழ் என்று பிரிக்க வேண்டும். நச்சினார்க்கினியர் உந்தூழ் என்றே பல இடங்களிலும் கொண்டார். எவரோ ஒருவர் 'முந்துTழ்' என்று பிரித்து வழங்கிவிட்டமையால் அச்சொல்லையே நிகண்டுகளும் கையாண்டன. 'முந்துாழ்' என்பதை விட 'உந்துாழ்’ என்பதற்குப் பொருட் பொருத்தம் உண்டு. பெருமூங்கில் செடியியலின்படியும் நடப்பிலும் ஒரு நாளில் 8 அங்குலம் முதல் 16 அங்குலம் வரை வளர்ச்சிகொண்டது. கனுக்கனுவாக உந்துமுறையான நேர்ஒழுங்கில் வளரும் வளர்ச்சி கொண்டு உந்து + ஊழ் (முறை, ஒழுங்கு) எனப்பெயர்பெற்றது. எனவே, 'உந்து ழ் என்பதே இதற்கு உரிய சொல். 'முந்து.ழ்' பிறழப் பிரிபட்டதால் தேர்ந்த சொல். மூங்கில் இனம் குறிஞ்சி நிலத்தது. (சில வகை பாலை நிலத்தவை) எனவே, உந்துாழ் குறிஞ்சி நிலத்தைச் சார்ந்தது. மலையைக் குறிக்கும் 'வரை என்னும் சொல் மூங்கிலுக்கும் உரியது. இரண்டினும் உள்ள பிறவித் தொடர்பைக் குறிப்பது இச்சொல் 'உந்தூழ் ஆய்மலர் உதிர ... வாடை துரக்கும் வருபணி அற் சிரம்'8 -என இப் பூ உதிரும் பருவமர்க முன்பணிக்காலம் குறிக்கப்படுகின்றது. இப்பூவின் பருவ மும் முன்பணிக்காலமே, இதற்கு 'ஆய்மலர்' என்னும் அடைமொழியைத் தந்தவர் நக்கீரனார். மேலும் கபிலர் இம்மலரை, - 'உரிது நாறு அவிழ் தொத்து'க் - என அடைமொழிகள் தந்து இதற்கு மூன்று விளக்கம் வைத்துள்ளார். உரிது நாறு= தனக்கு உரித்தாக நாறும்; அவிழ் = விரிந்து தொத்து உந்துTழ் = கொத்தினை உடைய பெருமூங்கிற் த், இவ்வாறே நச்சினார்க் கினியர் பொருள் விரித்துள்ளார். இருப்ெரும் புலவர்களது அடை மொழிகளால் இப்பூ ஆராய்ந்தெடுக்கத்த்கும். மலர் என்றும், 'ኳ ) ; 1 அகம் : 78 7; 8, 8 க்கம் 18:8, 10, 8 தறு : 289 : .ே 4 35 սr 1 65,