பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

85


 தேகத்தைத் தூய்மையாகக் காத்து வாழ்வதையே, தெய்வத்திருப்பணியாக சிறந்தவர்கள் மேற்கொண்டனர்.


வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவே வழியில்லை, நேரமில்லை என்று வம்பு பேசுகிற இக்கால மக்களிடம், உடம்புக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள், தூய்மையாக்குங்கள், அப்படிச் செய்தால் வாய்மை வளரும் நேர்மை வளரும். மனித நேசம் வளரும், ஒற்றுமை வளரும், என்று சொல்கிறபோது கேட்கமாட்டார்கள் என்றாலும், நம்பிக்கையுடன் நாம் இதை பேசுவோம் நடைமுறைப் படுத்துவோம்.


காயமும் மெய், காலமும் மெய், வாழ்வும் மெய், வழிகளும் மெய், நாம் வாழும் காலம் வரை நம்முடன் கூட வருகின்ற இவற்றுடன், வளமாக வாழ்ந்து விடவேண்டும் என்ற வேட்கையுடன் வாழலாமே!


முயற்சிப்பதில் தவறில்லை. மனநிறைவு நிறைய கிடைக்கும். அது போதும்.