பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104

பொருளதிகார உரையில் நன்கு புலப்படுத்தியுள்ளார். அது வருமாறு: o

‘பாலைத்தன்மையாவது, காலையும் மாலையும் நன்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும் கிழலுமின்றி நிலம் பயம் துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்ப மின்றித் துன்பம் பெறுவது. 8

என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு பாலை கிலத்தின் கொடிய தன்மையினே ஒருவாறு உணரலாம். இம் மட்டோடன்றி வழிப்போவோரைத் தாக்கித் துன் புறுத்தும் ஆறலைகள் வர்கள் ஆங்கே வாழ்கின்றனர் என்றும், அவர்கள் வழிச்செல்வோரிடம் கைப்பற்றிக் கொள்வதற்குப் பொருள் இல்லையெனினும் நஞ்சு தோய்ந்த அம்பெய்து அவர்தம் உயிர்கிலைகளிற் பாய்ச்சிக் கொல்லு கின்றனர் என்றும், அத்தகு கொடிய வழிகளிற் பறவை களும் பறவா என்றும் பாலை பாடிய பெருங்கடுங்கோ தம் பாலைக்கலியில் கூறியுள்ளார்:

“ அற்றம்பார்த் தல்குங் கடுங்க்ண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவலிற் புள்ளும் வழங்காப் புலம்கொள் ஆரிடை “ இத்தகைய நிழல் அடங்கி அற்றுப் போன நீரில்லாத கடத்தற்கரிய பாலே வழியிலே செல்லும் தலைவன் ஒளி விடுகின்ற கெற்றியையுடைய தன் தலைவியை எண்ணு கின்றான். அவளே கினைக்குந்தோறும். நீண்ட மூங்கில்கள் உலறுமாறு வேனில் டுேதலால் மிக்க கதிர்களையுடைய ஞாயிறு, கற்களும் பிளவெய்துமாறு காய்தலின் முன்பு

8. օտրձարճւամ: -ുക്കു :9. 9. கலித்தொகை: 4: 3-6.