பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


நோயாளிகள், தென்புல வாழ்ார்க்குப் பிதிர்க்கடன் செலுத்தும் கற்பிள்ளைகள் பெ ரு தோர் ❖ሄጫ இத்திறத்தார் பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே சென்று விடுதல் வேண்டு மென்னும் அறத்தாறு காரண மாக அறிவிக்கும் உயர் குறிக்கோள் ஒன்று இருந்ததாகப் பின் வரும் புறநானூற்றுப் பாடல் கொண்டு அறியலாம்.

“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறம்.” பாண்டியன் அறிவுடை நம்பி சங்க காலத்தில் பீடுற அரசோச்சிய பெருமன்னனுவான். புவி காவலகை விளங்கிய அவன் கவி நாயகனுகவும் விளங்கியிருக்கின்றான். அத்தகு அரசன் செல்வச் சிறப்பில் திளைத்திருந்திருப்பான் என்பதில் ஐயமில்லை. அம்மன்னன் பல செல்வங்களைப் படைத்திருப் பினும் குழந்தையாகிய குறைவற்ற செல்வம் ஒன்றனைப் பெருதவரிருட்பின் பயனில்லை என்று திட்டவட்டமாகத் தெளிவுற மொழிகின்றான். அவ்வாறு அவன் குழந்தைச் செல்வத்தின் ம r -ன் பி னே க் குறிப்பிடும்பொழுது குழந்தையின் ஒவியத்தினை நம் மனக்கண்முன் கொண்டு வந்து சிறுத்தி விடுகின்றான். இதோ அவன் வழங்கும் எழிற்காட்சி:

‘ படைப்புப பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை மீட்டி இட்டுக் தொட்டுங் கவ்வியும் துழந்தும்

3. புறநானூறு: 9:1-6