பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124

முயற்சியால் பெறும் பொருளைத் துய்த்தலே இன்பம் :

உகாய்க்குடி கிழார் என்னும் சங்கத்துச் சான்றாேர்,

‘ ஈதலுங் துய்த்தலு மில்லோர்க் கில்லென ‘’ ‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தினேயே கற்றிணை,

“ இசையு மின்பமு மீதலு மூன்றும்

அசையுடன் இருந்தோர்க் கரும்புணர் வின்மென ‘

என்று குறிப்பிடுகின்றது. திருவள்ளுவர் பெருமானும் “அழகிய மாமை நிறம் பொருந்திய தலைவியது முயக்கம் தமக்கு உரிய இல்லின்கண் இருந்து தன் தாளான் வந்த பொருளைத் துய்த்தற்கு இணையானது’ என்ற கருத்துப்

و ـLلك

“ தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு ‘

என்று குறிப்பிட்டுள்ளார்.

அறச் செயல்களுக்கு அமைவது பொருள் :

அறத்தினின்று பிறழாத வாழ்க்கையும், பிறர் தலே வாயிலிற் சென்று இரக்காத விலையும் பொருளால் பிறங்கும் என்பதனே,

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்

பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளி குைம் ‘

என்று அகநானூறு அறிவுறுத்துகின்றது.

21. குறுந்தொகை : 53-1 22. கற்றி அண: 214 : 1.2 .23. திருக்குறள்: 1107 .24. அகநானுாறு: 155: 1.3