பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

145

தெறித்துகடை மரபின்தன் மறிக்குகிழ லாகி கின்றுவெயிற் கழிக்கும் என்பகம் இன்துயில் முனிகர் சென்ற ஆறே.’ “

இதற்கு அன்பு வாழும் ஆண்மானின் அன்பு நெஞ் எனக் குற்றமற்ற நெஞ்சு என்று-வழுவில் நெஞ்சு’ என்று பாராட்டுகின்றார் புலவர்,

இத்தகைய அன்பு வாழ்வினக் கற்றறிந்தார் ஏத்தும் கலி பின்வருமாறு கூறும்.

அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும் புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும்என பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றாம் காதலர்’ “

என்று தலைவன் மேற்கொண்ட செலவின் காரணத் தினையும்.

துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே’ “

என்று வற்றிய பாலையில் வற்றாத அன்பு கொண்டு வாழும் யானைக் குடும்பத்தினையும்,

“ அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை

மென்சிறக ரால்ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே’ “

என்று இணைப் புருக்களின் இனிய காதல் கெஞ்சத் தினையும்,

17. குறுந்தொகை: 218 18. பாலக்கலி ; 11:1-4 19. பாலைக்கலி; 11 : 8.9 20. பாலைக்கலி; 11 : 12-13

10