பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

186

சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர் பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர் பாடு பாணியர் பல்லியத் தோளினர் ஆடு கூத்தர் ஆகி எங்கணும் ஏந்துவாள் ஒழியத் தாந்துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தர.”

இவ்வாறு வடபுல வேந்தர்கள் நடுநடுங்கும் வண்ணம், களிறுகளை எருதாகவும், வாளே பிடிக்கும் கோலாகவும், பகைவீரர்களே சூட்டடிக் கதிர்களாகவுங். கொண்டு, வாளையுடைய தான் உழவகை கின்று அப் போரிலே அதரி திரித்துக் கலக்கினன், செங்குட்டுவன். இத்தகைய அரசனது மறக்கள வெற்றியினைப் புகழ்ந்து, பேய்களெல்லாம் நெடிய கைகளைக் கரிய தம் தலைமிசை யுயர்த்தி அசைத்தனவாய், திருமால் பாற்கடல் கடைந்த போது நிகழ்த்திய தேவாசுர யுத்தத்தையும், அவன் இலங்கையில் இராமனுக | ட த் தி ய போரையும் . கண்ணகை கின்று தேரூர்ந்து நிகழ்த்திய பாரதச் செரு. வையும் இதனேடு ஒருசேர வைத்துப் பாடி வாழ்த்திக் குரவைக் கூத்தாடின.

‘ கச்சை யானைக் காவலர் கடுங்கக்

கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக ஆளழி வாங்கி அதரி திரித்த வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித் தொடியுடை கெடுங்கை தூங்கத் தூக்கி முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக் கடல்வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ் இலங்கையி லெழுந்த சமரமும் கடல்வணன் தேரூர் செருவும் பாடிப் பேரிசை முன்றேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி.

1 W 5

5. சிலப்பதிகாரம் : கால்கோட் காதை : 225-230 6. சிலப்பதிகாரம் : கால்கோட் காதை : 231.240