பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20

மேற்புல மன்னனுடைய மனைவி, மூன்று லட்சம் பவுன் மதிப்புள்ள முத்து அணிந்திருந்ததாகவும், தமிழ்நாட்டு முத்துக்களுக்கும் மணிகளுக்கும் ஈடாக இருபது லட்சம் பெறும் உரோம நாட்டுச் செல்வம் தமிழகத்திற்குக் கிடைத்ததாகவும் வரலாறு கூறுகின்றது. பிளைனி (Pliny) என்ற வ ர லா ற் ரு சி ரி ய ர் இதனை வருந்திக் குறிப்பிட்டுள்ளார். ‘

சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் பெயர்களும், ஆர்க்காடு, கரூர், முசிறி, தொண்டி கொற்கை, குமரிமுனை, பொதிகை, கோடிக் கரை முதலிய இடப்பெயர்களும் கிரேக்கர் முதலான மேனுட்டு மக்கள் குறிப்புக்களில் இடம்பெற்றுள்ள சிறப்பினைக் கால்டுவெல் காட்டுவர். ‘ கி. மு. 20ஆம் ஆண்டில் பாண்டிய மன்னன் ஒருவன் ஐரோப்பாவில் அங்காளில் புகழ் பெற்று விளங்கிய அகஸ்டஸ் மன்னனுக்குத் தாது அனுப்பின்ை. கி. பி. 223ஆம் ஆண்டில் ஏற்பட்ட உரோம நாட்டுக் குறிப்புக்களின்படி (Peutingerian Tables of 225 A.D) @ror-ru%gth a Grrld நாட்டு வீரர்கள் கொண்ட படை ஒன்று முசிறித் துறைமுகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பழைய உரோம நாணயங்கள் பல தமிழகத்தில் மேற்குக் கடற். கரைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இக் கருத் துக்களுக்கு அரண் செய்கின்றன. ஸ்டிரபோவின்

--

16. Pliny complaincq in 70 A. D. that India drained gold to the value of nearly a million pounds a year giving back her own wares, which are sold among as at fully a hundered times their first cost.

—‘P. T. Srinivasa Iyenger, History of the Tamils, P.305.

17. Dr. Caldwell—A comparative Grammar of the Dravidian, languages, Introduction, pp.15-28.