பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

218

இராமாயணத்திற்குத் தந்த பெயர் ‘ இராமாவதாரம்” என்பதாகும். ஆயினும் இராமாயணம் என்னும் வட சொற்றாெடர்க்கு இராமபிரானுடைய வடிவழகினேயும் குணாலன்களையும் சிறந்த செயல்களையும் அறிவிப்பது என்பது திரண்ட பொருளாகும்; சிதாபிராட்டியின் வடி வழகும் குணாலமும் ஒழுகலாறும் அறிவிப்பது எனவும் பொருள் கூறலாம். ‘இராமாயணத்தால் சிறையிருந்த வளேற்றம் சொல்லுகிறது என்னும் தொல்லாசிரியர் (புற வசனபூஷணம்) கூற்றும் இதற்கு ஆதரவாகும். -

எனவே இராமனின் திருக்கல்யாண குணங்களைக் கூறுவது இராமாயணம் எனலாம். பாத்திரப் படைப்பிலே கம்பர் ஈடு இணையற்று விளங்குகிறார்.

‘கம்பர் கண்ட இராமன்-கணவன்-என்ற தலைப் பினைச் சிறிது விளங்கக் காண்போம். இராமன் நல்ல’ மைந்தகைவும், உத்தம சகோதரகைவும். உயிர் நண்பகை வும் விளங்கியது போன்றே, சீதைக்கு ஆருயிர்க் கணவகை வும் விளங்குகிருன்.

“ காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே

ஓவிய எழிலுடை ஒருவன அலது ஓர் ஆவியும் உடலமும் இலதுஎன அருளின் மேவினன் உலகுடை வேந்தர்தம் வேந்தன்’

என்ற செய்யுள் இராமன்பால் தசரதன் கொண்ட ஆரா அன்பினைப் புலப்படுத்துவதாகும்.

வேள்வியைக் காக்க விசுவாமித்திர முனிவர் ‘சிறுவர் கால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என்றே. தசரதனிடம் கேட்டார். அதைக் கேட்ட தசரதன். ‘கண்ணிலான் பெற்று இழந்தான் எனக் கடுந்துயரம் உழந்தான்.

1. பாலகாண்டம் , திருவவதாரப் படலம் : 1.20.