பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

222

இவ்வாறு சிதை மிகவும் விரும்பிய கிலேயில் இராமன் காட்சியளிக்கின்றான்.

இனி, சீதையின் கணவன் என்ற நிலையில் கம்பர் காட்டும் இராமன் எத்துணை அளவு சிறந்தவகைக் காட்சி யளிக்கின்றான் என்பதனைக் காண்போம். ‘ஆழி சூழ் உலக மெல்லாம் பரதனே ஆள, கீ போய்த் தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருங் தவமேற்கொண்டு பூழிவெம் காணம் நண்ணிப் புண் ணியத் துறைகளாடி ஏழிரண் டாண்டின் வாவென் றியம்பினன்’ அரசன் தசரதன் என்று கூறினுள் கைகேயி. “மன்னவன் பணியன்றாகில் நூம்பணி மறுப்பனே, என் பின்வவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றாே என்று கூறி இராமன் அந்தப்புரம் விரை கிருன். கோசலையைக் கண்டுவிட்டுச் சீதையிடம் வரும் இராமன் மரவுரி புனேந்து வருதலேக் கண்டவுடன் சிதை துணுக்கமுற்று எழுகிருள். கடந்தது இன்னதென அறியா நிலையிலும் அவள் நெடுங்கண்ணிலிருந்தும் ர்ே வழிகின்றது. “உற்றது என்ன? என அவனை நோக்கி உருக்கத்தோடு உசாவிள்ை. அதற்கு மறுமொழியாக இராமன்,

  • பொருவில் எம்பி புவிபுரப் பான்புகழ்

இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய் கருவி மாமழைக் கல்தடம் கண்டு கான் வருவென் ஈண்டு வருக்தலை நீ என்றான்.'” “நீ வருந்தலை: நீங்குவென் யான்’ என்ற இயவெஞ் சொல் செவி சுடத் தேம்பிள்ை சிதை. பாற்கடலில் உடன் உறைந்த காலத்தும், ‘அறம் திறம்பல் கண்டு ஐயன் இராமன் அயோத்தியில் பிறந்த பின்பும் பிரியலள் என்ன வாழ்ந்த சீதை, ஐயனும் அன்னையும் சொன்னது செய்யத் துணிந்தது தூயதே என்னை

5. அயோத்தியா காண்டம் : நகர்,நீங்கு படலம் : 216