பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

248

தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்” என்று குறிக்கப் பெறுகின்றார். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக இவர் கருதப் பெறுகின்றார்.

இவ் இடைக்காலத்திற்றான் சைவ சித் தாங் த சாத்திரங்களுக்குச் சைவப் பெருமக்கள் தம் சமயப் பற்றும் திறனும் விளங்க அரிய உரைகண்டனர். பிரபந்த உரையாசிரியர்கள் மணிப்பிரவாள நடையில் ஆழ்வார் களின் அமுதப் பாடல்களுக்கு வியாக்கியானங்கள் கண்டனர். திருவியலூர் உய்ய வந்த தேவர், மெய் கண்டார், அருணங்தி சிவாச்சாரியர், தி ரு வ தி கை மணவாசகங் கடந்தார், கொற்றவன்குடி உ மா பதி சிவாசாரியார் முதலிய சைவ சமயப் பெரியோர் சைவ, சித்தாந்த சாத்திரங்களுக்கும், பிள்ளான், கம்பிள்ளே, அழகிய மணவாளர். பெரியவாச்சான்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை முதலிய வைணவ சமயப் பெரியோர் திவ்யப்பிரபந்தத்திற்கும் திறம்பட உரை கண்டனர். கற்பனை வளனும் உணர்ச்சியும் மிகுந்த சொல்லோவி யங்களை மணிப்பிரவாள நடையில் வைணவ உரை யாசிரியர்கள் எழுதினர். குருபரம்பரைப் பிரபாவம் என்னும் நூலில் குடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் வரலாறு சுவைபடச் சொல்லப்பட்டுள்ளதனைக் காண

Gl)/TLs.

“ஆழ்வாரும் திருமகளாரும் அ தி ப்ரீ தி யு டன் அங்கிருந்தும் புறப்பட்டு, திருவரங்கன் திருப்பதியுள் எழுந்தருளினவாறே, குடிக் கொடுத்தாள் வந்தாள்! சுரும்பார் குழற்கோதை வந்தாள்! ஆ ண் டா ள் வந்தாள் ஆழ்வார் திருமகளார் வர்தார்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! தென்னரங்கம் தொழுக் தேவி வந்தாள்’ என்று பல சின்னங்கள் பரிமாற எழுந்தருள்வித்துக் கொண்டு. அழகிய மணவாளன்