பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 சீருப்புராணத்தில் இலக்கிய நயம்

தமிழ் இலக்கியச் செல்வத்தினைப் பல்வேறு காட்ட வரும் பல்வேறு சமயத்தவரும் அணிபெறச் செய்திருக் கின்றனர். காலத்திற்குக் காலம் கோலம் புதுக்கிச் செல்லும் தமிழ் இலக்கியப் பேரியாறு சிங்தைக்கினிய தாய்ச் செவிக்கினியதாய்ச் செம்மாந்து பிறங்குகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டிலே எட்டயபுர சமஸ்தானத் தைச் சேர்ந்த உமறுப்புலவர் இஸ்லாமியப் பண்பாட்டுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சிருப் புராணத்தை யாத்தார். “சிறத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள். “சீறத்’ என்னும் சொல்லிலிருந்து “சீரு’ என்னும் சொல் பிறந்தது. எனவே: சிருப் புராணம் என்பது தூய வாழ்க்கை வழிகின்று. வாழ்ந்த ஒருவரின் வரலாற்றினேக் கூறுவது என்பது பொருளாகும். இஸ்லாமியத் தமிழிலக்கியங்களுள் சீருப் புராணம் தலைமையும், முதன்மையுமான இடத்தினப் பெறுகின்றது. “நவில் தொறும் நூல் நயம் பயந்து கிற்கும் நூல்’ சீருப்புராணம் ஆகும்.

இஸ்லாம் சமயத்தை Ք-Gլ) :5 மக்களுக்குப் போதித்து, அதனை உலகெங்கும் பரப்ப முயற்சி மேற். கொண்டு அதற்காவன செய்த அருளாளனும், அன்பா ளனும் ஆகிய வணக்கத்திற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) பெருமான் அவர்களைப் பாட்டுடைத் த ல வ ர க க் .ெ கா ண் டு, அப்பெருமாளுரின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வாழ்க்கை, ஆற்றல், வெற்றி, அறவுரை