பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

284

இங்கிலேயினும் ஒருட்டி மேலே சென்றார் வள்ளலார்,

‘ எத்துணையும் பேதமுருது எவ்வுயிரும்

தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவரவர் உளங்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் கடம்புரியும்

இடமென கான் தெளிந்தேன் அந்த’ வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ’ என்று அவர் குறிப்பிட்டிருப்பது இவ்வுண்மையினே"மன்னுயிரையும் தன்னுயிராக” மதிக்கும் மாண்பினைக்

குறைவறப் புலப்படுத்தும்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றும்,

“ துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் கண்ணினுல் ஐயோ பிறஉயிர் பதைக்கக்

கண்டகா லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி

வகைகளும் கண்டபோ தெல்லாம் எண்ணிஎன் உள்ளம் கடுங்கிய நடுக்கம்

எந்தைகின் திருவுளம் அறியும்’ என்றும் அவர் பாடியிருக்கும் கிலே, அவர்தம் இரக்க உள்ளத்தைப் பெரிதும் புலப்படுத்துவனவாகும். அருளாளர் பலரும் தங்களைச் ‘சிவமாக்கி யாள வெண்டும்’ என்று சிவபெருமானிடம் சிங்தை கசிந்து கூற, வள்ளலாரோ வெனில், பிறவுயிர்களின் துன்பங்கண்டு நெஞ்சு கெக்குருகக் கசிந்து பேசுகின்றார்.

4. திருவருட்பா : ஆருந்திருமுறை; தனித்திரு மாலை: 8 5. திருவருட்பா ஆளுந்திருமுறை; பிள்ளைப் பெரு விண்ணப்பம்:

64