பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

298

லென்று தாமரைக் கொடிகள் இலையும் பூவும் விட்டுப் படர்ந்துள்ளன. பச்சை இலைப் பரப்பின்மேல் செங் தாமரை மலர்கள் அலர்ந்துள்ளன. அரச செருக்கோடு அன்னமொன்று தனியாக அமர்ந்துள்ளது. குளக் கரை யில் ஆடும் மயிலின் ஆட்டத்திற்கு ஏற்பச் சம்பங் கோழி யொன்று முழவொலி கூட்டுகின்றது. கரிய குயில் ஒன்று மரக்கொம்பில் அமர்ந்து இன்னிசைப் பாடலை எழுப்பு கின்றது .’

“ பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானக்

கிருள் வளைப் புண்ட மருள்படு பூம்பொழிற் குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் கல்லியாழ் செய்ய * வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் மயிலா டரங்கின் மக்திகாண் பனகாண் மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப் பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைகின் ைெருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்ன மாங்கினி திருப்பக் கரைகின் ருலு மொருமயி றனக்குக் கம்புட் சேவற் கனகுரன் முழவாக் கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணுய்’ இவ்வாறு காலையில் காணப்படும் சோலைக் காட்சி யினைச் சித்தலைச் சாத்தனர் தாம் இயற்றிய மணிமேகலைக் காட்பியத்தில் நயந்தோன்ற வருணித்துள்ளார்.

சித்திரையும் வைகாசியும் நம் காட்டில் இளவேனிற். காலம் என வழங்கப்படும். பங்குனித் திங்களில் பழுத்த இலைகளே உதிர்த்த மரங்களெல்லாம் சித திரைத் தொடக் கத்தில் மெல்லிய துளிர்விட்டுப் பசுமைக் காட்சி வழங்கும். வேம்பின் வெண் மலர்கள் பூத்துப் புதுமணம் கமழும்; தென்னே மர ங்கள் பசுஞ்சோலை விரித்துத்

3. மணிமேகலை, பளிக்கறை புக்க காதை: 1-13