பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45



(Periplus) குறிப்பிடுகின்றது. ஆண்டொன்றுக்கு உரோம காடு, தான் இந்தியாவிலிருந்து பெறும் ஆடம்பரப் பொருள்களுக்காக மிலியன் பவுனுக்கு ஈடான பொன்னை வாரி வழங்கி வறுமையுற்று விடுகிறதே என உரோம காட்டு வரலாற்றாசிரியர் பிளினி (Pliny) வருந்திக் கூறுவாராயினர். ‘

தொழில் வளம்: உழவும் நெசவும் பெரிதும் போற்றப் பட்டன. பாலாவி போன்றும் மூங்கிலின் மேல்தோல் போன்றும் மென்மையும் நுண்மையும் கொண்ட ஆடைகள் நெய்வதில் தமிழர் பெயர் பெற்றிருந்தனர். பட்டு, எலிமயிர் முதலியவற்றால் ஆகிய சிறந்த ஆடைகளும் நெய்யப் பெற்றன. ஆடைகளுக்குத் தமிழ்ப் பெயர்களே அழகுற அமைந்திருந்தன. தறிகளில் வெட்டுவது “வேட்டி’ என்றும், குறைப்பது “கூறை’ என்றும், துண்டு போடுவது “துண்டு’ என்றும் கூறப்பட்டன. அக்கால மக்கள் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த அணிகலன்களை அணிந்திருந்தனர். பொன்னல் செய்த அணிகலன்களில் மணிகளைப் பதித்து அணிந்து வந்தனர்.

--

12. The extravagant importation of luxuries from the west. without adequate production of commodities to offer in exchange, was the main cause of the successive depreciation and degradation of the Roman currency leading finally to its repudiation.

—P. T. Srinivasa Iyenger, History of the Tamils, P-308.

13. So that Pliny complained in 70 A.D. that India drained gold to the value of nearly a million pounds a year giving back her own wares, which are sold among as at fully a hundred times their

first cost.