பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

63

“ஸ்வஸ்தி பூரீ திருமகள் போல...செழியரைத் தேசு கொள் பூரீ கொ இராச கேசரிவன்மர்க்கு யாண்டு பதினெட்டாவது-இராசராசத் தென்னு ட்டு வள்ளுவ நாட்டு முட்டம், முட்டமென்னும் பேரைத் தவிர்த்து மும்முடி சோழ கல்லூரென்று பேராக்கி இக் காட்டுத் திருகங்திக்கரை மாதேவர்க் குப் பெருமான் ஐப்பிசைச் சதயத்தினுள் திருவிழா வெடுத்து"

என வரும் கல்வெட்டுப் பகுதியும்,40திருவெண் காட்டுக் கல்வெட்டொன்றும், 41 இராசராசன் பிறந்த ஐப்பசி சதய நாளில் ஆண்டுதோறும் விழா நடந்த செய்தியினே நுவலும். இதுபோன்றே இவன் மகன் முதலாம் இராசேந்திர சோழனின் பிறந்தநாள் விழா மார்கழித் திருவாதிரை நாளில் கொண்டாடப் .ெ ப ற் ற தன ‘திருவொற்றியூருடைய மாதேவர்க்கு உடையார் நீ இராசேந்திர சோழதேவர் திருநாள் மார்கழித் திருவாதிரை ஞான்று நெய்யாடியருள வேண்டுமென்று (6) மிசத்துக்குத் திருவொற்றியூர் திருமயானமும் மடமுடைய ேவாசதுரானன பண்டித தேவர்பண்டாரத்து வைத்த காசு நாற்றைம்பது’ என்ற திருவொற்றியூர்க் கல்வெட்டுப் பகுதி 42 அறிவிக்கிறது.

கலிங்கத்துப்பரணி காட்டும் வெள்ளணி நாள்

9. முதற் குலோத்துங்கன் பிறந்தநாள் போல் எந்த காளிலும் பெரிய நிலமகளுக்கு கிழலாகப் பொருந்திய அவன் கொற்றக் குடையைப் பாடீர். குலோத்துங்க சோழனைப்

-_

40. Travancore Archaelogical P. 292. 41. S. I. I. Vol. V., No. 979. 42. S. 1. I. Vol. V., No. 1354.