பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இரப்பவர்தம் வறுமை பாய்க்குப் பகைவகை விளங்கின்ை. அவர்தம் வறுமை யைப் போக்கும் பொருட்டு, நாடோறும் நல்ல பல அணிகலன்களே அரியனவென்று பொருட்படுத்தாது வாரி வழங்கிளுன். இத்தகு வள்ளன்மை உள்ளம் வாய்ந்த காணத்தினுல் புலவர்கள் அவனுக்குப் பாராட்டு மொழிகள் பல புகன்றார்கள். இவ்வாறு இசை மேம்பட்டமையால் இசைபோய அவன்தன் வண்மையைக் கேள்வியுற்றே, தாம் அவAணக் காண வந்ததாகக் கவினுறக் கவிதையில் வடித்துக் அட்டுகினருர் காக்கைபாடினியார் கச்செள்ளையார்:

வள்ளியை என்றலின் காண்குவம் திசினே

இரவலர் புன்கண் தீர நாடொறும் உரைசால் கன்கலம் வரைவில விசி அணையை ஆகல் மாறே. *

இவ்வாறு கொடைமடம் கொண்ட கோமகனின் ாட்டில் வறுமையும் தங்குமோ! வறுமை வற்றி வளம் Wறைந்தது அவன் திருநாட்டிலே. ‘இல்லை’ என இரப்போர் இல்லயாயினர்; ஆயிலும் இரவலர் வாரா வைகலே அவன் சிறிதும் விரும்பவில்லை. எனவே பிற நாடுகளிலிருந்து பாவலர்களைத் தேரில் கொணர்ந்து, அவர்களுக்கு வேண்டு வனவற்றை விரும்பிக் கொடுத்து அவர்களே மாரு மகிழ்ச்சி யில் விெளக்கச்செய்தான் மன்னவர் பெருந்தகை:

“ வாரார் ஆயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்தவர்க்கு ஆர்பதன் கல்கும் ாகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்.” 2

11. ம்ெ.யப்பத்து: VI 4:1-9.

1 படும்.துப்பத்து: VI 5: 10.12 .

()