பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86

அடுத்து, எட்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் பெருஞ்சேர விரும்பொறையின் கொடைப் பண்புகளை அரிசில்கிழார் வழிகின்று காண்போம். பெருஞ்சேரல். இரும்பொறையின் வளமும் ஆண்மையும் கொடைச் சிறப்பும், சிந்தையும் மொழியும் செல்லா நிலைமையினே புடையன; - o

“ வளனும் ஆண்மையும் கைவண் மையும்

மாந்தர் அளவிறந் தன. “ மேலும் காளவை யன்றியும், பகைவர் நடுவின்கண் அமைந்த பாசறையின் கண்ணும் ஆடிப்பாடி வரும் இரவலர்க்கு, களிறும் குதிரையும் கணக்கின்றிக் கொடுக்கும் கொடைப் பண்புடைய கோடா கெஞ்சினன் பெருஞ்சேரல் இரும்பொறை என்று அரிசில் கிழார் அழகுறப் பாராட்டியுள்ளார் :

“ இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு

ஈதல் தண்டா மாசிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென்.’ ‘

வரையாது வாரி வழங்கும் இவன் கைவண்மையினே,

‘ கொடை போற்றலையே இரவலர் நடுவண்’ “

என்று கூறியிருப்பதும், பதிகம் அரும்பெறல் மரபின் அரசுகட்டிலேயே அரிசில் கிழார்க்கு உவந்தளித்த கெஞ்சினன் இவன் என்று கூறுவதனையும் உன்னி நோக்கின் பெருஞ் சேரலிரும்பொறையின் கொடைப் பெருமிதம் குன்றிலிட்ட விளக்கென ஒளிரா கிற்கும்.

இறுதியாக, என்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவ ளுகிய குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின் சர

40. பதிற்றுப்பத்து : VIII 3 : 12-13. 41. பதிற்றுப்பத்து : VIII 6 : 7.9. 42. பதிற்றுப்பத்து : VIII 9 : 2.