பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழ் வேந்தர் ஒழுக்கம்

ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுறு ஆண்டு களுக்கு முன் தமிழகம் தமிழ் மன்னரால் ஆளப் பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் வேந்தர் இயல், இசை, நாடகம் என்ற முத் தமிழிலும் வல்ல புலவர், பாணர், கூத்தர் என் போரை ஆதரித்தனர். வேந்தருட் சிலர் கவிப்ாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அவர்தம் பாக்களும், புலவர்கள் தமிழ் முடிமன்னரையும், குறுநில மன் ன்ரையும், பிற் வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களும் மிகப் பல. அவற்றுள் அழிந்தன போக, எஞ்சிய பாக்கள் புறநானூறு என்னும் தலைப்பில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந் நூலிலுள்ள பாக்கள் பல நூற்ருண்டு களில் பல புலவர்களால் பாடப் பெற்றவை; அப் புலவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். புற நானூற்றுப் பாடல்களில் பண்டைத் தமிழ் வேந்தர் செங்கோற் சிறப்பும், போர் முறையும், அவர்கள் புலவர்களைப் போற்றிய திறனும், த மி ழ் மக்க ளுடைய பழக்க வழக்கங்களும், நாகரிகமும், நாகரி கத்தின் தலைமணியான பண்பாடும் நன்கறியலாம்.

பூத பாண்டியன்

இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு எனப் பெயர் பெற்றது.

மதுரையைத் தலை நகராகக் கொண்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னருள் பூத பாண்டியன் என்பவன் ஒருவன். இப் பூத பாண்டியன்மீது பகையரசர் ப்டை யெடுக்கத் துணிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/20&oldid=640699" இலிருந்து மீள்விக்கப்பட்டது