பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை

மூவகைத்தமிழ்

மனிதன் உரை நடையிலும் செய்யுள் நடையி: லும் செய்திகளை அறிகின்ருன். இவ்விரண்டும். இயல் எனப்படும். பண் இசைத்துத் தாள வரை யறை செய்து பாடப்படுவதும் ஒரு வகை. அது இசை எனப்படும். இயலும் இசையும் கலந்து, காண்பார் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க வல்லதாய் நடித்துக் காட்டப்படுவது நாடகம் எனப் படும். இம் மூன்றும் ஒவ்வொரு மொழியிலும், அமைந்துள்ளன. ஆல்ை ஏறத்தாழ இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை இங்ங் னம் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வளர்த் த பெருமை தமிழ் ஒன்றுக்கே உரியது என்பது தவரு. காது. அப்பண்டைக் காலத்தில் தமிழ்-இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவு களாக வகுக்கப்பட்டிருந்தது. இயற்றமிழில் வல்ல வர் புலவர் என்றும், இசைத் தமிழில் வல்லவர் பாணர் பாடினியர் என்றும், நாடகத் தமிழில் புலமை பெற்றவர் கூத்தர் கூத்தியர் என்றும் பெயர் பெற். றிருந்தனர். முத்தமிழ்ப் பயிற்சி -

இக்காலத்தில் இருத்தலைப் போலச் சங்க காலத், தில் கல்லூரிகள் இருந்தன என்று துணிந்து கூறு தல் இயலாது. ஆயினும், நாட்டின் மொழியாகிய, தமிழ்ை நலமுறக் கற்பிக்க எண்ணிறந்த திண்ணைப் பள்ளிகளோ உயர்நிலைப் பள்ளிகளோ இருந்திருத் தல் வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/34&oldid=640717" இலிருந்து மீள்விக்கப்பட்டது