பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் பெருந்தகை

57

.

தன்றே! வறுமையில் வாடினும் பெருமிதத்தில் நும் போன்ற வேந்தர்களுக்குக் குறையாததன்ருே புலவர் வாழ்வு! தம் வறுமையைப் பிறர் எள்ளினும் பொறுத் திடும் புலவர், தம் புலமையை எள்ளும் புல்ல்றி வாளரை ஒரு போதும் விடார்காண். "தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்' என வீறு கொண்டெழுந்து புலமையைப் பழித்த புல்லறி வாளரைத் தம் அறிவு மதுகையால் வாதிட்டு வென்று, "தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” எனக்கூறி நிமிர்ந்து செல்லும் கவியரசர் வாழ்வு புவியரசர் வாழ்விற்கு எட்டுனையும் குறைந்த தன்று. பூமாதும் புகழ்மாதும் திருமாதும் பொருந்: திய உன் போன்ற வேந்தரை யொத்த தலைமையுடை யது புலவர்தம் பரிசில் வாழ்க்கை என்பதை நன் குணர்ந்து நடப்பாயாக,” என்று சினந்து கூறினர் கோவூர் கிழார். -

பகைவர் சினத்திற்கும் அஞ்சாத நெடுங்கிள்ளி புலவர் சினத்திற்கு அஞ்சித் தலைவணங்கின்ை; தன் தவறுணர்ந்தான்; 'அறிவுத் தெய்வமாக விளங்கும் புலவரைக் கொன்று உலகம் உள்ளளவும் நீங்காப் பழியைத் தேடிக் கொள்ளத் துணிந்தேனே!” என்று மனங்கவன்று, இருபெரும் புலவர்பாலும் மன்னிப்பு வேண்டினன்; புலவர்க்குப் பெரும் பரிசிலை நல்கி உவந்தனுப்பின்ை.