பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. இடைக்காலத் தமிழ் (கி. பி. 300-கி. பி. 1800)

அரசியல் நிலை

ஏறத்தாழக் கி. பி. 300-க்குப் பிறகு காஞ்சியைத். தலைநகராகக் கொண்டு பல்லவர் என்ற புதிய மர பினர் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆளத்தொடங்கு கினர். அப்பல்லவரால் தாக்குண்டு தமிழ்நாடு" புகுந்த களப்பிரர் சோழநாட்டையும் பாண்டிய நாட். டையும் கைப்பற்றிக் கொண்டனர். பல நூற்ருண்டு: களாகத் தமிழகத்தை ஆண்டுவந்த சோழ பாண்டியர்கள் இங்ங்ண்ம் தம்மாட்சியை இழந்து களப்பிர ருடனும் பல்லவருடனும் போரிட வேண்டிய நிலைமை. ஏற்பட்டது. இக்குழப்ப நிலை ஏறத்தாழ 300-வருட காலம் நில்ைத்திருந்தது என்னலாம். இதனை இருண்டகாலம் என்று வரலாற்ருசிரியர் கூறுவர்.

கி. பி. 6-ஆம் நூற்ருண்டின் இறுதியில் சிம்ம. விஷ்ணு என்ற பல்லவன் பகைவரை அடக்கிப் பல்” லவப் பேரரசை நிலைநாட்டின்ை; அவ்வாறே கடுங் கோன் என்ற பாண்டியன் களப்பிரரை ஒழித்துப் பாண்டிய அரசை ஏற்படுத்தினன். ஒன்பதாம் நூற். றண்டின் இறுதியில் பல்லவரை அழித்துச் சோழர் பேரரசை ஏற்படுத்தினர். அவர்கள் ஏறத்தாழ 400-. வருடகாலம் திென்னிந்தியாவை ஒரு குடைக்கீழ், வைத்தாண்டனர். கி.பி. 14-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் மாவிக்-காபூர் பன்டயெடுத்தார். அந், நிகழ்க்சியால் தக்கணத்தை ஆண்ட யாதவ அரசர், காகதீயர், மைசூர் நாட்டையாண்ட ஹொய்சளர் என்பவர் நிலைகலங்கினர். தமிழகம் தத்தளித்தது. மதுரையில் ஐம்பது ஆண்டுகள் முஸ்லிம் ஆட்சி ஏற்பட்டது. அதன் பின்னர்த் தமிழகம் விசய் நகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_அமுதம்.pdf/93&oldid=640775" இலிருந்து மீள்விக்கப்பட்டது