இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
127 ஆகவே, ஒன்றேகால் வராகனெடை கொண்டது ஒரு கழஞ்சு என்பது நன்கு துணியப்படும். இதுகாறும் கூறியவற்றால் புறநானூற்றுச் செய்தி களுள் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதி எய்துவனவும், அந்நூலில் கூறப்படும் நாடுகளையும் ஊர்களையும் பற்றிக் கல்வெட்டுக்களால் புலப்படுவனவும், புறநானூறு, கல்வெட்டுக்கள் இவற்றுள் பொதுவாகக் காணப்படும் சில வழக்கங்களும், சில சொற்களையும் சொற் றொடர்களையும் பற்றிய செய்திகளும் நன்கு விளங்குதல் காண்க.