பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவ்வாறிருக்க, அவ்வுரையால் அறியப்படும் அகத்தியம் என்னும் நூல் இப்போ தில்லாமையால் முன்பும் இருந்திலது என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. தொல்காப்பியத் திற்கு உரைகண்ட ஆசிரியர் பலரும் தம் உரைகளில் அகத்தியத்தைக் குறிப்பிட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூல் மயிலைநாதர் உரையிலும், அத்நூல் கூறப்பட்டிருக்கின்றது. அன்றியும், அவ்வுரை யாசிரியர் எல்லோரும் தம் உரைகளில் பல அகத்தியச் சூத்திரங்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளனர். புறப் பொருள் பன்னிரு படலப்பாயிரமும், வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் - ஆனாப் பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதலூல்' என்று அகத்தியத்தைக் குறிப்பிடுவது உணரற் பால தாகும். எனவே, அந்நூல் முற்காலத்தில் வழங்கிவந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. இனி, தொல்காப்பிய வுவமை வியல் இறுதிச் சூத்தி ரத்தின் உரையில், 'அகத்தியனராற செய்யப்பட்ட மூன்று தமிழினும்' என்று பேராசிரியர் கூறியிருப்பதால், அந்நூல், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணமாயிருந்தது என்பது நன்கு பெறப்படும் அன்றியும், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில், 'நாடகத் 'தமிழ் நாலாகிய பாதம் அகத்தியம் முதலாயுள்ள தொன் லூல்களும் இறந்தன' என்று அடியார்க்கு நல்லார் உரைத் திருப்ப தால் அவ்வுண்மை வலியுறுதல் காண்க. அகத்தியர் பால் இசைத் தமிழ் கற்ற சிகண்டியார் என்பார் இசை நுணுக்கம்' என்னும் நூல் எழுதியுள்ளனர் என்பது