________________
வாதவூரடிகள் காலம். சில அறிஞர்கள் மணிவாசகப் பெருமான் தேவாரம் பாடிய மூவர்க்கும் முன் வாழ்ந்தவர் என்று கருது கின்ற னர். திருநாவுக்கரசர் திருவாரூர்ப்பதிகத்தில் கரியைக் குதிரை செய்வாலும் எனவும், திரு விசய மங்கைப் பதிகத்தில் 'குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவள் வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே' எனவும், திருப் பூவணப் பதிகத்தில் 'வையைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமூத்தோன் தும்!' எனவும், தனித்திருத்தாண்டகத்தில் "குடமுழநந் தீசக வாசகளுக் கொண்டார்' எனவும் கூறி விருப்பவை மாணிக்கவாசகர் வரலாற்றுப் பகுதிகளை யுணர்த்தும் என்பது அவர்கள் முடியாகும். திருவாருர்ப் பதிகத்தில் திருநாவுக்கரசர் தம் காலத் திற்குமுன் நிகழ்ந்ததோர் அரிய நிகழ்ச்சியை உணர்த்து வதாயிருந்தால் 'நரியைக் குதிரை செய்வானும்' என்று கூருமல் நரியைக் குதிரை செய்தாலும் என்றுரைப்பதோடு மணிவாசகப் பெருமானது பெருமை புலப்படுமாறு அடி களது பெயரையும் கூறியிருப்பர். அங்ஙனம் சொல்லா