பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இலக்கியங்கள் வாழ்க்கையின் ஒலியன்கள் 1 இந்த எட்டாவது கட்டுரையில் நாம் தொட்டும் துருவியும் பார்க்க வேண்டிய ஒரு பெரும் பொருள் எது இலக்கியம்? என்பதே. இவ்வினவிற்கு விடை கூறக் கடந்த பன்னுாறு ஆண்டுகளாக எத்தனையோ பேர் எவ்வளவோ முயன்றுள்ளனர். எனவே பணிவுடனும் துணிவுடனும் நாமும் முயல்வோம். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா : .* - கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா! சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?" என்று பாடுகிருர் கவிஞர் கண்ணதாசன். 4